இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் நெருக்கடியை சந்தித்து வந்த நிலையிலேயே அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அவர் 44 நாட்களே பிரதமர் பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து புதிய பிரதமர் அடுத்த வாரத்தில் தெரிவுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பிரதமர் பதவிக்கு அடுத்து ஒருவர் நியமிக்கப்படும் வரை அந்த பதவியில் செயற்பட நடவடிக்கை எடுப்பதாக லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.