இந்த வாரம் எரிபொருள் விலை திருத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ப எரிபொருளை ஓர்டர் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவிலேயே மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
விலை குறைப்பை எதிர்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஓர்டர்களை வழங்காததால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறுமையாக காட்சியளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.