மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன் நாளை முதல் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும்.
இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில், இடைக்கிடையே 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
அதேநேரம், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில், மாலை அல்லது இரவு வேளையில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com