வென்னப்புவ – பேரகஸ் ஹந்திய பிரதேசத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தங்கச் சங்கிலியை திருடிய சந்தேகநபரை கைது செய்வதற்காக இன்று (29) மாரவில காவல்துறையினர் சென்றுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள போது, கைது நடவடிக்கையின் போது அந்நபர் அவர்களை தாக்கியபோதே சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக மாரவில காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்போது, சந்தேகநபர் காவல்துறை அதிகாரிகளை வாளால் தாக்கியதில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதில் காயமடைந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 52 வயதான சந்தேகநபர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவருடன் இருந்த மற்றைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.