யாழ்ப்பாணம், எழுவைதீவு கடற்பரப்பில் 137 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை இடைமறித்த கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
கேரள கஞ்சா 56 பொதிகளில் இருந்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படையினர் இந்த நடவடிக்கையில் பிடிபட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 54 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாகும்.
20 முதல் 44 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் பூனேரியில் வசிப்பவர்களே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.