கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் புகையிரத கடவையை கடந்த போக்குவரத்து சபை பேருந்து மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
குறித்த விபத்து இன்று (20) காலை 8.15 மணியளவில் அறிவியல் நகர் புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றி பயணித்த அரச பேருந்து, புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த யாழ் ராணி புகையிரதம் பேருந்து மீது மோதியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com