அஸ்வெசும நலத்திட்ட உதவித் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் பெப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நன்மைகள் திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
சட்ட நெறிமுறைகளுக்கு இணங்க பயனாளிகளின் தரவுகளை ஆண்டுதோறும் நினைவுகூரும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது என தலைவர் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக 2500 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.