Saturday, July 27, 2024
HomeTamilயாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரைமாய்த்து கொண்டுள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தை(வயது 41) ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் முச்சக்கர வண்டி சாரதியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் 24 ஆம் திகதி இரவு முச்சக்கர வண்டியில் செல்லும்போது குப்பிழானில் விபத்து சம்பவித்தது.

இதனால் அவர் முச்சக்கர வண்டியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்றையதினம் அவரது வீட்டுக்கு முன்பாக உள்ள புளியமரத்தில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular