வைத்தியர் ஒருவரின் கைப்பையிலிருந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் ATM அட்டை ஆகியவற்றை திருடி அதன்மூலம் பணம் எடுக்க முயற்சித்த பெண் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை கேதுமதி வைத்தியசாலையில் பயிற்சிக்காக வந்துள்ள பெண் வைத்தியர் ஒருவரின் கைத்தொலைபேசி மற்றும் ATM அட்டையே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
திருடிய ATM மூலம் பணம் எடுக்க முயன்றமை CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட பண்டாரகம பகுதியை சேர்ந்த 50 வயதான பெண்ணை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.