அடுத்த வருடம் மின்சாரப் பயன்பாடு மேலும் குறைவடையும் எனவும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அவசியமில்லை என இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் மாலக விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், மின்சாரக் கட்டணத்தை இப்போது அதிகரிக்க வேண்டிய அவசியம் கிடையாது. மின்சார சபையில் மாபியா செயற்படுகிறது. இதன் பின்னணியில் ஊழல் மோசடியான அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் என பலர் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் கூறும் மின்கட்டண அதிகரிப்பை மேற்கொண்டால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அடுத்த வருடம் நூற்றுக்கு 20 சதவீதமாக ஒரேயடியாக அதிகரிக்க வேண்டும்.
ஆனால் அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சி மேலும் வீழ்ச்சியை நோக்கியே பயணிக்கப்போகிறது. எனவே மின்சாரப் பயன்பாடும் குறைவடையும் எனவும் தெரிவித்தார்.