Saturday, July 27, 2024
HomeTamilஅத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் 40க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள் முடங்கியதுடன், நோயாளிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடாக உள்ள மருந்துகளுக்கு கொள்முதல் கட்டளைகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் பணம் செலுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் இந்தியக் கடன் வரியின் கீழ் முன்பதிவு செய்யப்பட்டு, அந்த 43 மருந்துகளும் இன்னும் பதினைந்து நாட்களில் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தட்டுப்பாடாக உள்ள எஞ்சிய மருந்துகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார செயலாளர் ஜனக சந்திரகுப்த இதனை தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular