கால்நடை உற்பத்தி சுகாதார நிறுவனத்திடம் அனுமதி பெற்று முட்டைகளை இறக்குமதி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது முட்டை இறக்குமதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
எனினும், கால்நடை உற்பத்தி சுகாதார நிறுவனத்திடம் அனுமதி பெறவேண்டியுள்ளது.
குறித்த அனுமதி அடுத்துவரும் நாட்களில் கிடைக்கபெறும்.
அனுமதி கிடைத்தவுடன் முட்டை இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.