Saturday, July 27, 2024
HomeTamilஅரசியல்"அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்"- கவனயீர்ப்பு போராட்டம்

“அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்”- கவனயீர்ப்பு போராட்டம்

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நாவற்குழி சந்தியில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சம்ஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular