மருதானையில் ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், டெக்னிக்கல் சந்தியின் ஊடாக கோட்டையை நோக்கி சென்றது.
இதனால், அந்தப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் காணப்பட்டது.
சந்தைக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தால் மருதானை, புறக்கோட்டை பகுதியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் புறக்கோட்டை வீதியை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். காவல்துறையினருடன் விசேட அதிரடிப்படையினரும் கலகமடக்கும் காவல்துறையினரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆயுதமேந்திய இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.