2023 ஆம் ஆண்டு அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு உட்பட்டு சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கான சுற்றறிக்கை, அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்னேவினால், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட முற்பணக் கொடுப்பனவு, ஜனவரி முதலாம் திகதி தொடக்கம், பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் வழங்கி முடிவுறுத்தப்பட வேண்டும்.
பெப்ரவரி 28ஆம் திகதியின் பின்னர் இந்த முற்பணக் கொடுப்பனவு செலுத்தப்படமாட்டாது.
இந்தக் கொடுப்பனவானது, 2023 ஆம் ஆண்டுக்குள்ளேயே அறவிட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.