Saturday, July 27, 2024
HomeTamilஆற்றில் விழுந்து மூன்று சிறுமிகள் மாயம்!!

ஆற்றில் விழுந்து மூன்று சிறுமிகள் மாயம்!!

சூரியவெவ, மஹாவெலி கடார வாவியில், இன்று (12) காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குருநாகல் – பிகிம்புவ பகுதியிலிருந்து சூரியவெவிலுள்ள உறவினர் வீட்டுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வுக்காக படகில் வாவியின் மத்திய பகுதிக்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படகு கவிழ்ந்ததில் அதில் 8 பேர் இருந்ததாகவும் எட்டு மாத கைக்குழந்தை உட்பட ஐவர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூவரில், 10 வயதான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன, 17 மற்றும் 18 வயதான மேலும் இரண்டு சிறுமிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular