Saturday, July 27, 2024
HomeTamilஆற்றில் விழுந்த எரிபொருள் பௌசர் !!

ஆற்றில் விழுந்த எரிபொருள் பௌசர் !!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பத்துளுஓயா பகுதியில் உள்ள பாலத்தினுள் எரிபொருள் பௌசர் ஒன்று இன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கம் காரணமாகவே அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சபுகஸ்கந்தையில் இருந்து பாலாவி சீமேந்து தொழிற்சாலையில் எரிபொருளை இறக்கி விட்டு மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம் பத்துளுஓயாப் பகுதியில் பௌசர் பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு நீர்த் தேக்கத்தினுள் வீழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசரில் இருந்து சாரதியை காவல்துறையினரும் பொது மக்களும் இணைந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாலத்தினுள் விழுந்துள்ள எரிபொருள் பௌசர் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 60 மீற்றர் தூரம் வரை சென்று புகையிரத பாலத்தை அண்டிய பகுதியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

விபத்துக்குள்ளான பௌசரை மீட்கும் பணியையும் மேலதிக விசாரனையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular