இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் சற்று முன்னர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
பிரித்தானிய முன்னாள் மகாராணி எலிசபெத்தின் மறைவை அடுத்து, மன்னராக பதவியேற்ற சார்ல்ஸினால் வழங்கப்படும் முதல் பிரதமர் நியமனமாக இது அமைந்துள்ளது.
இந்த நியமனத்தின் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சுனக், அரசாங்கத்தை அமைக்குமாறு மன்னர் சார்ல்ஸ் விடுத்த அழைப்பை தாம் ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ட்ரஸ், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த விரும்பியதில் தவறில்லை என்று சுனக் குறிப்பிட்டார்.
மாற்றத்தை உருவாக்க முன்னாள் பிரதமர் ட்ரஸின் முயற்சியை தாம் பாராட்டுவதாக ரிஷி சுனக் தெரிவித்தார்.
தாம் நிதியமைச்சராக இருந்தபோது மக்களின் நலனுக்கு செயற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.