Saturday, July 27, 2024
HomeTamilஇந்தியாவில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 40 பேர் பலி!

இந்தியாவில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 40 பேர் பலி!

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் சுமார் 40 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பாலம் அறுந்து விழுந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது 400 பேர் கட்டடத்தில் இருந்ததாகவும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் குறித்த தொங்கு பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் மீண்டும் அறுந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular