இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன
அவர் இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து இலங்கையின் தலைவர்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கை வருவார் என்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சீனாவின் உயர்மட்டக்குழு ஒன்று நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புக்களை நடத்தவுள்ளது.