யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2022/11/312984190_207312528342237_3036078614436164889_n.jpg)
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து யாழ்பாணம் ஊடாக கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி சுமார் இரவு 12.15 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இதன்போது பேரூந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2022/11/312717742_207312711675552_6081385168047389105_n.jpg)
பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்ததோடு அதில் நால்வர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேரூந்து சாரதியான சிவபாலன் சிவரூபன் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் சம்பவதில் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பேரூந்தின் சாரதி உடுப்பிட்டியை சேர்ந்த சிவரூபன் என்பதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2022/11/312839897_207312598342230_26509158033925298_n-1.jpg)