முட்டைக்கான அதிகூடிய சில்லறை விலைகளை நிர்ணயித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் ஆகக்கூடிய சில்லறை விலை 44 ரூபாவாகவும், பழும்பு முட்டையொன்றின் விலை 46 ரூபாவாகவும் புதிய கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி இன்று (20) நள்ளிரவு வெளியாகுமென அந்த அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார்.
அதேவேளை, முட்டைக்கான விலை சூத்திரத்தை, எதிர்வரும் 3 தினங்களுக்குள் வழங்குமாறு கோப் குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதிகார சபையின் அதிகாரிகள், கோப் குழுவுக்கு நேற்று (19) அழைக்கப்பட்டபோது, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முட்டை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் 32 ரூபாய் 5 சதத்துக்கு இறக்குமதி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.