Saturday, July 27, 2024
HomeTamilஇன்று முதல் 30 குறுந்தூர புகையிரத சேவைகள் ரத்து!

இன்று முதல் 30 குறுந்தூர புகையிரத சேவைகள் ரத்து!

இன்று முதல் 30 குறுந்தூர புகையிரத சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக புகையிரத சேவைகளை இரத்துச் செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிரதான புகையிரத மார்க்கத்தின் 18 தொடருந்து சேவைகளும், களனிவெளி மற்றும் புத்தளம் மார்க்கத்தின் தலா 2 புகையிரத சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளன.

அத்துடன், கரையோர புகையிரத மார்க்கத்தின் 8 புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

500 க்கும் அதிகமான சேவையாளர்கள் கடந்த வருடம் 31ம் திகதியுடன் ஓய்வு பெற்றிருந்தனர்.

இதனால் ஏற்பட்ட சேவையாளர் பற்றாக்குறை காரணமாக, கடந்த வாரத்தில் 40க்கும் அதிக புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular