எதிர்வரும் திங்கட்கிழமையுடன் தற்போது கையிருப்பில் இருக்கும் ஃபைசர் தடுப்பூசிகள் காலாவதியாகப்போவதாக சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரு நாட்களுக்குள் பொது மக்கள் இயன்றவரை ஃபைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா பரவலின் தாக்கம் குறைவாக காணப்பட்டாலும் பொது மக்கள் கொவிட் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.