இரத்தினபுரியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக இரத்தினபுரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவம் இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் பெல்வாடிய பிரதேசத்தில் இன்று(10) காலை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
எம்பிலிபிட்டியவில் இருந்து இரத்தினபுரி புதிய நகருக்கு அரச சேவையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார் பேருந்தும் இரத்தினபுரி, தெனியாய தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் பத்து பேருக்கும் அதிகமானவர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இரத்தினபுரி, தெனியாய தனியார் பஸ் வண்டியில் பயணித்தவர்களுக்கே அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவித்த இரத்தினபுரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.