இரண்டு பேரூந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் 40 பேர் காயமடைந்துள்ளதாக மாவனெல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு- கண்டி பிரதான வீதியின் மாவனெல்ல- உதுவகந்த பிரதேசத்தில் இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றது.
இ.போ.ச பேரூந்து ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.