Saturday, July 27, 2024
HomeTamilஇரண்டு பேரூந்துகள் மோதி விபத்து !

இரண்டு பேரூந்துகள் மோதி விபத்து !

கண்டி-பண்டாரவளை பிரதான வீதியில் பேரூந்து விபத்து இடம் பெற்றுள்ளதாக ஹங்குராங்கெத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (18) மாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 15 க்கு அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.

கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை நோக்கிச் சென்ற பேரூந்தும், பண்டாரவளையிலிருந்து அதே வழியில் கண்டியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேரூந்துகள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவித்த போது பலத்த காயங்களுடன் கீர்த்தி பண்டாரபுர கழகத்தின் பிரதேச வைத்தியசாலைக்கும், ஒரு சிலர் வலப்பனை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர்ர் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular