இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனம் இன்று சனிக்கிழமை (22) அதிகாலை திருகோணமலையில் இருந்து மாதுரு ஓயா நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து முத்துவெல்லவில் உள்ள மரத்தில் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கொண்ட டிஃபென்டர் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயர் அதிகாரிகெப்டன் உயிரிழந்துடன் மேலும் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 4 சிறப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரி தேவிந்த உட்வார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.