Saturday, July 27, 2024
HomeTamilஇருமல் மருந்து அருந்தி 100 சிறுவர்கள் மரணம்!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இருமல் மருந்து அருந்தி 100 சிறுவர்கள் மரணம்!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தி 100 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து இந்தோனேசியாவில் தற்போது இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய அதிகாரிகள் குழந்தைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், இருமல் மருந்து ஒன்றில் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேவேளை,இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பருகியதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காம்பியாவில் 70 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பு குறித்த இருமல் மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular