இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 பேருந்துகளை வழங்குவதற்கான உத்தரவு தமக்கு கிடைத்துள்ளதாக இந்திய அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய ஊடகங்கள் இன்று இதனைத் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கான இந்திய கடன் வசதியின் கீழ் இந்த பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.
இதன் முதற்கட்டமாக 75 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியா உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.