ஒன்று கூடும் சுதந்திரம் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது என அமெரிக்கா இன்று தெரிவித்துள்து.
இந்தநிலையில் குடிமக்களின் உரிமைகளை ஆதரிப்பதற்கான இடத்தை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை அவர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்துமாறும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக கொழும்பில் இன்று நடத்தப்படும் பாரியளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.
அத்துடன் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்திருந்தனர்.