கடந்த நவம்பர் மாதம் வௌிநாட்டு பணியாளர்களினால் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 3,313.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
செப்டம்பரில் 317.4 அமெரிக்க டொலர்காக இருந்த பணம் அனுப்பும் வீதம் ஒக்டோபரில் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.