Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கை வந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

இலங்கை வந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

இன்று பிற்பகல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

அத்துடன், இந்த விஜயத்தின்போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular