பிலியந்தலை – பெலென்வத்த பகுதியில் நேற்று (15) மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெண்ணை கடத்தியதாக கூறப்படும் சந்தேகநபர் மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான கடற்படை சிப்பாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், கடத்தப்பட்ட பெண்ணுடன் சந்தேகநபர் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், பின்னர் அதனை 6 மாதங்களுக்கு முன் நிறுத்தியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட பெண்ணுக்கு கடற்படை சிப்பாய் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், கடத்தல் தொடர்பில் பிலியந்தலை காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.