Saturday, July 27, 2024
HomeTamilஉயர்தரப் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!!

உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!!

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகும் வகையில் அனைத்துப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் நடத்துவது ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம். அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ அல்லது தரப்பினரோ இந்த உத்தரவுகளை மீறினால் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது பொலிஸ் தலைமையகம் அல்லது இலங்கைப் பரீட்சை திணைக்களத்திற்கு பின்வரும் இலக்கங்களில் முறைப்பாடு செய்யுமாறும் அமித் ஜயசுந்தர பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • பொலிஸ் தலைமையகம் – 011 242 1111
  • பொலிஸ் அவசர அழைப்பு பிரிவு – 119
  • இலங்கை பரீட்சை திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கம் – 1911
  • பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் – 0112 785 211 / 0112 785 212
  • பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறு கிளை – 0112 784 208 / 0112 784 537
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular