இன்று (25) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
பெப்ரவரி 17 ஆம் திகதி வரை க.பொ.த உயர்தர பரீட்சை காலத்தில் மின்வெட்டுகளை விதிக்க வேண்டாம் மற்றும் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சு, பொது பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உட்பட அனைத்து தரப்பினரும் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையில் இணக்கம் தெரிவித்துள்ளன.