Saturday, July 27, 2024
HomeTamilஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் வெட்டிக்கொலை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் வெட்டிக்கொலை!

மட்டக்குளிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை காரில் வந்த இருவர் இந்த கொலையை செய்யதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular