சமூக ஊடகங்களில் சூழல் மாத்திரை என்ற ஒரு பொருள் எரிபொருளில் கலக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விளக்கமளித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் விநியோகிக்கப்படும் எரிபொருளில் இதனை உள்ளடக்குவதற்கு எந்த நிறுவனத்திற்கும் தாம் உத்தரவுகளை வழங்கவில்லை அல்லது அனுமதியை வழங்கவில்லை எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, இந்த மாத்திரைகள், பெட்ரோலின் ஒக்டேய்ன் அளவை அதிகரிப்பதுடன், எரிபொருளில் கந்தகத்தை குறைக்கிறது.
அதேவேளை செயல்திறனை மேம்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.