இன்று இரவு முதல் அமுலாகும் வகையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கு அமைய முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு 5 லீற்றரில் இருந்து 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் வாடகை அடிப்படையில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கே இந்த எரிபொருள் அதிகரிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மாகாண போக்குவரத்து அதிகாரசபை மற்றும் காவல்துறை திணைக்களத்தில் ஒன்லைனில் பதிவுசெய்யப்பட்ட மேல் மாகாண முழு நேர முச்சக்கர வண்டிகளுக்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.