கடந்த வெள்ளிக்கிழமையன்று எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டமையால், நாளை மறுதினம் (15) மீண்டும் விலைகள் திருத்தப்பட மாட்டாது என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என்று அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11) நள்ளிரவு முதல், டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 430 ரூபாயாகவும் மண்ணெண்ணெய் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 365 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வழங்குநர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புதிய முறைமைக்கு அமைய கடந்த 55 நாட்களாக நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் இருந்து மசகு எண்ணெயை தரையிறக்கும் சனிக்கிழமை (12) பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.