சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட சில ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த ட்விட்டர் முடிவு செய்துள்ளது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் உலகின் மிகவும் பிரபல சமூகவலைதள நிறுவனமான டுவிட்டரை சமீபத்தில் வாங்கினார்.
இதனையடுத்து, டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7 ஆயிரத்து 500 ஊழியர்களில் 50 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி கடந்த 5 ம் தேதி டுவிட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது.
இதனால், டுவிட்டர் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், நிறுவனத்தை மறுசீரமைக்கும் நோக்கில் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட சில ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த முடிவு எடுக்கப்பட்டதாக எலோன் மஸ்க் கூறியிருந்தார்.