ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.
இதன் போது 1978 இல் இலங்கைக்கான தனது முதலாவது விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம், ஜனாதிபதியிடம் நினைவுகூர்ந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்று (06) காலை எகிப்து பயணமானார்.
ஜனாதிபதி அடுத்த வாரம் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா கட்டமைப்பு மாநாட்டின் (COP27) 27ஆவது மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
குறித்த COP27 மாநாடு ஷர்ம் அல்-ஷேக் சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று முதல் நவம்பர் 18 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளார்.