Saturday, July 27, 2024
HomeTamilகடலுக்குள் பாய்ந்த கார்!!

கடலுக்குள் பாய்ந்த கார்!!

மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று இன்று பிற்பகல் வெல்லமடம பகுதியில் கடலில் வீழ்ந்துள்ளது.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ருஹுணு தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளரான குறித்த காரின் சாரதி, காலியை வசிப்பிடமாகக் கொண்ட 50 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த அவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular