கடவுச்சீட்டு கட்டணத்தை நாளை (17) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் சாதாரண சேவை கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 9,000 ரூபாவாகவும், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் சாதாரண சேவைக் கட்டணம் 2,500 ரூபாவில் இருந்து 3,000 ரூபாவாகும் அதிகரிக்கப்படவுள்ளது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2022/11/1668609542-T-724x1024.jpg)