உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரச்சாரப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று விஜயம் செய்தார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய பசில் ராஜபக்ச,
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் 252 உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு போன்ற ஏனைய பிரதேசங்களில் கட்சி கூட்டணியாக போட்டியிடும் என்றார்.
தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் அரசாங்கத்திடமே விசாரிக்கப்பட வேண்டும், மேலும் நான் அரசாங்கத்தில் இல்லை என்றார்.
தேர்தலில் தாமதம் ஏற்படாது என்று கூறிய அவர், இத்தகைய வதந்திகள் இருந்த போதிலும், சிறிலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிட தயாராகி வந்தது என தெரிவித்தார்