Saturday, July 27, 2024
HomeTamilகட்டணம் அதிகரிக்கப்படாவிடின் மின்வெட்டு தொடரும்!

கட்டணம் அதிகரிக்கப்படாவிடின் மின்வெட்டு தொடரும்!

மின்சாரக் கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படாவிடின், மின்வெட்டு தொடருமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார்.

நாளாந்த மின்வெட்டைக் குறைக்கும் வகையில், மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டணங்கள் விதிக்கப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையின் நிலக்கரி நெருக்கடி மற்றும் நுரைச்சோலை மின் நிலையத்தில் அதன் தாக்கம் குறித்து இன்று (27) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுவரையில் மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யவே மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அண்மையில் கூறப்பட்ட கூற்றுக்களை மறுத்த அவர், தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யவே இந்த கட்டண அதிகரிப்பு முன்மொழியப்படுவதாக விளக்கினார்.

மின்சார சபையின் நட்டத்தை ஈடுசெய்ய கட்டணங்கள் அதிகரிக்கப்படுமாயின், இதனைவிட அதிக சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், நாளாந்த மின்வெட்டு காலத்தை குறைந்தது ஆறு மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் முன்னதாக அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular