Saturday, July 27, 2024
HomeTamilகட்டுப்பாட்டை இழந்த சாரதி- 9 மாத குழந்தை பலி!

கட்டுப்பாட்டை இழந்த சாரதி- 9 மாத குழந்தை பலி!

குருநாகல் வாவி சுற்றுவட்ட வீதியில் யத்தம் பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்று (7) பன்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் நான்கு பயணிகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் குறித்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

குருநாகல், பமுனுகெதர பிரதேசத்தை சேர்ந்த சிலரே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular