Saturday, July 27, 2024
HomeTamilகரையோர தொடரூந்து சேவைகள் தாமதமாகும்!

கரையோர தொடரூந்து சேவைகள் தாமதமாகும்!

கரையோர மார்க்கத்தின் கொம்பனித்தெரு – கொள்ளுப்பிட்டி தொடரூந்து நிலையங்களுக்கு இடையே பாலம் ஒன்று பழுதடைந்துள்ளது.

இந்தப் பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக, கரையோர தொடரூந்து சேவைகள் தாமதமாகியுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக இரட்டை வழியாக இயங்கும் தொடரூந்துகள் கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் ஒற்றைப் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கரையோர மார்கத்திலிருந்து இருந்து பிரதான மார்க்கம் மற்றும் புத்தளம் பாதைக்கு பயணிக்கும் தொடரூந்துகள் தாமதமடையும் சாத்தியம் காணப்படுகின்றது.

வெள்ளவத்தைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான தொடரூந்து பாதை தற்காலிகமாக மூடப்பட்டதால், கரையோர தொடரூந்து மார்க்கத்தில் இன்று 10 தொடரூந்து சேவைகளை ரத்து செய்ய தொடரூந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பாலத்தை சீரமைக்க குறைந்தது ஐந்து நாட்களாகும் எனவும் குறித்த காலப்பகுதியில் வெள்ளவத்தை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான தொடரூந்து சேவையில் தாமதம் ஏற்படும் எனவும் தொடரூந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular