2022 ஆம் ஆண்டில், அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுசரணை பெற்ற (தமிழ் – சிங்கள) பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதால், நாளை (20) முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.