Saturday, July 27, 2024
HomeTamilகாவல்துறையினரின் கோரிக்கையை நிராகரிப்பு!

காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரிப்பு!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கருவாத்தோட்டம் காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (08) நிராகரித்துள்ளார்.

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டால் காவல்துறை அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்து கொழும்பு கோட்டைக்கு அருகில் போராட்டம் ஒன்றை நடத்தி வருவதன் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியை காவல்துறையினர் மூடியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular